தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய காப்பீட்டு திட்டம் அமல்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வர உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காப்பீட்டு திட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சைக்கு ரூ.4 லட்சமும், மற்ற சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ 7.5 லட்சமும் செலவழித்து கொள்ளலாம். இந்த காப்பீடு திட்டமானது, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.
LPG சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி!
இதற்கிடையில் கொரோனா பேரலை காரணமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான காப்பீட்டு அட்டையை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த அரசு துறைகளில் பணிபுரியும் சுமார் 12 லட்சம் ஊழியர்களிடமிருந்து மாதந்தோறும் 150 ரூ பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் ஒரு ஆண்டுக்கு 259 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு கிடைத்தது. இந்த தொகையை வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டமானது இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியாகியுள்ளது. முன்னதாக மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.180 லிருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு யுனைடெட் இந்தியா நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
D.GOPALRAJU
The fraudulent activity of previous Govt.is continued by present govt.also.It is correct to implement the above scheme with out obtaining proper consent from the individual.
Correction:
It is not correct.
Mmmmm
It is mere robbery of govt.servant salary.