ஒரே சீரியலில் 3 கதாநாயகிகள்.. விஜய் டிவியில் மாஸாக தொடங்கப்படும் புதிய நெடுந்தொடர்!
விஜய் டிவியில் புதிதாக சீரியல் ஒன்று தொடங்கப்பட இருக்கும் நிலையில், அதில் சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர், மெயின் ரோலில் களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் அந்த சீரியலில் 3 கதாநாயகிகள் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புது சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களின் மனதில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி மவுசு உண்டு. இந்நிலையில் விஜய் டிவியில் இனி வரும் காலங்களில் முன்னணி சீரியல்கள் ஒரு பக்கம் முடிய இருந்தாலும், பல புதிய சீரியல்கள் வர இருக்கின்றன. அது குறித்த அப்டேட் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவியில் மூன்று நாயகிகளுடன் புது சீரியல் ஒன்று தொடங்கப்பட இருக்கிறது.
சீரியல் முடிய இருக்கும் நேரத்தில் என்ட்ரி கொடுத்த பிக் பாஸ் நடிகை – குழப்பத்தில் ரசிகர்கள்!!
Exams Daily Mobile App Download
அதில் ஹீரோவாக ஏற்கனவே ஒளிபரப்பாகி முடிந்த சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த நடிகர் ஜெய் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அந்த சீரியலின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் மூன்று கதாநாயகிகள் இருப்பதாகவும், அதில் இரண்டாவது மெயின் ரோலில் சின்னத்திரை நடிகை காயத்ரி நடிக்க இருக்கிறார். மேலும் அவர் சமீபத்தில் தாலாட்டு சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.