சிலிண்டர் விலையில் வரவிருக்கும் புதிய மாற்றம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!

0
சிலிண்டர் விலையில் வரவிருக்கும் புதிய மாற்றம் - பொதுமக்கள் கவனத்திற்கு!!
இந்தியாவில் பிப்ரவரி 1ஆம் தேதி எந்தெந்த புதிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மாற்றம்:

இந்தியாவில் பொதுவாக ஒவ்வொரு மாத துவக்கத்திலும் சிலிண்டரின் விலையில் இருந்து பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது பிப்ரவரி மாதம் முதல் எந்தெந்த விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட இருக்கிறது என்பது குறித்தான விளக்கத்தை காணலாம். முதலாவதாக, இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேசிய பென்ஷன் திட்டத்திற்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது, தேசிய பென்சன் திட்ட கணக்கில் இருந்து முதலீட்டாளர்கள் 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை முன்கூட்டியே எடுக்க முடியாது.

அதேபோல, Fastag கேஒய்சி சரிபார்ப்பை ஜனவரி 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கேஒய்சி சரிபார்ப்பு முழுமை அடையவில்லை எனில் Fastag செயல் இழக்கப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்ததாக பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPS முறை மூலமாக ஒருவருக்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக பணம் அனுப்பும்போது பயனாளியின் பெயரை கட்டாயமாக அதில் சேர்க்க வேண்டும். இதுபோல, எக்கச்சக்க மாற்றங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!