நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் மாவட்டங்களில் அரசு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அதிகரித்து கொள்ள உத்தரவிட்டுள்ளதை அடுத்து, நாளை முதல் திருப்பூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது.
புதியகட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்தது. இதனால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. ஊரடங்கு காலத்தில் அனைத்து விதமான இயக்கத்திற்கும் அரசு தடை விதித்தது. அரசின் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கி வந்தது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் தமிழகத்தில் 2ம் அலையின் தாக்கம் மெல்ல குறையத் தொடங்கியது.
நாடு முழுவதும் இதுவரை 48.89 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்!
இதனால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்க தொடங்கியது. இருப்பினும், ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் அங்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தது. பாதிப்புகள் குறைவதை பொறுத்து மாவட்ட நிர்வாகம் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் அங்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாவட்டம் முழுவதும், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். அதேபோல் டாஸ்மாக் மது கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பால் மருந்து பொருட்கள் மற்றும் காய்கறிகள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.