ஜன.1லிருந்து ரேஷன் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் – உடனே இதை பண்ணுங்க!!
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிடில் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.
ரேஷன் பொருள்:
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் தொடர்பாக ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக மத்திய அரசு ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருகிறது. ஆனால், பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழஙகப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் அவதி – பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு!!
இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும், அடுத்த ஆண்டில் இருந்து ரேஷன் கார்டு தொடர்பான எந்தவித சலுகையும் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும்.