தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்துள்ள மிகப்பெரிய சிக்கல் – இனி எந்த உதவி தொகையும் கிடைக்காது!!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வந்துள்ள மிகப்பெரிய சிக்கல் – இனி எந்த உதவி தொகையும் கிடைக்காது!!

அரசின் சலுகைகளை பெறுவதற்கு பலரும் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்து வரும் நிலையில் தற்காலிகமாக ரேஷர் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் அரிசி கார்டு, சர்க்கரை கார்டு மற்றும் பொருளில்லா கார்டு என பொதுமக்களின் பொருளாதார வசதிக்கேற்ப ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே தமிழக அரசின் சார்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை, பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசின் சலுகைகளை பெறுவதற்காக ஒரு குடும்பத்தில் உள்ளவர்களே தனித்தனி ரேஷன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நாளை (ஜன.22) எங்கெல்லாம் பவர் கட்? – முழு பட்டியல் இதோ!

இவ்வாறு, ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு, மூன்று ரேஷன் கார்டுகள் இருக்கும் நிலையில் அனைவர்க்கும் தமிழக அரசின் சார்பில் நிதி உதவி வழங்க முடியாது. எனவே, புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு வழங்குதல் மட்டுமல்லாமல் பழைய ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல் பணிகளும் தற்போது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!