தொழிற்பள்ளிகள் துவக்க விண்ணப்ப பதிவு தொடக்கம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தொழிற்பள்ளிகள்:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் நூற்றுக்கணக்கான தொழிற்பள்ளிகள் உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக இங்கு பல தொழிற்பிரிவுகளை சேர்ந்த பாடங்கள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் விருப்பமான தொழிற்பாடங்களை பயின்று கொள்ளலாம்.
வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் – தேர்தல் ஆணையம்!!
புதிய தொழிற்பள்ளி:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் அவர்கள் புதிய தொழிற்பள்ளிகளை திறப்பது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2021- 2022ம் கல்வி ஆண்டிற்கான தொழிற்பள்ளிகளை ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கலாம். மேலும் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் தொடங்குதல், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் போன்ற பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது.
விண்ணப்பம்:
தொழிற்பள்ளிகள் குறித்தான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 30ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இது குறித்து அதிக விவரங்களை பெற திருச்சி மண்டலப் பயிற்சி இணை இயக்குனர் அலுவலகத்தை 0431- 2422171 மற்றும், தஞ்சாவூர் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தை 04362- 278222 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்