தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் புதிய ஐடி பார்க் – அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!
தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
புதிய ஐடி பார்க்:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் அரசின் அனைத்து துறைகள் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாத கோரிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து துறை சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும், அதற்கான மானியம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அரசு மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மற்றும் உரியவர்களுக்கு திட்டங்கள் விரைவில் சென்று சேரும் வகையிலும், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று முன்னதாக போக்குவரத்து துரையின் கொள்கை விளக்கம் நடைபெற்றது.
தமிழக அரசுப் பேருந்துகளில் 18.93 கோடி பெண்கள் இலவச பயணம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!
அதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதார அமைப்பு, அரசு துறைகளின் அலுவலக செயல்பாடுகளை மின் மயமாக்கும் திட்டம், தரவு மையக் கொள்கை, உலகளாவிய திறன் மையக் கொள்கை உள்ளிட்டவை உருவாக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து, மெய்நிகர் அருங்காட்சியகம், உள்ளடக்க தமிழ் மின் நூலகம், அரிய ஒளி, ஒலி ஒளிப்படம், புகைப்படங்கள் மற்றும் பிற வரலாற்று படங்களை மின் உருவாக்கம் செய்தல் உள்ளிட்டவை செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், அமைச்சர் மனோ தங்கராஜ் யூமாஜின் எனும் வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாடு நடத்தப்படும் என்றும், தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் அரசின் அநேக திட்டங்களில் மாநிலத்தின் இரண்டாம், மூன்றாம் நிலை மாவட்டங்களின் தரம் உயர்த்தப்படுவதற்கான அறிவிப்புகள் வெளிவருகிறது.