ஆதார் கார்டை போல விவசாயிகளுக்கான தனித்துவமான ID – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!
ஆதார் அட்டையை போல உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளுக்கும் பண்ணை ஐடி வழங்கலாம் என அரசு முடிவெடுத்திருக்கிறது. அந்த பண்ணை ஐடி குறித்தான முழு விளக்கத்தையும் அரசு தற்போது வெளியிட்டுள்ளது
புதிய ஐடி
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை போல ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனித்துவமான பண்ணை ஐடியை வழங்கலாம் என உத்திரப்பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் இந்தப் பண்ணை ஐடியின் மூலமாக விவசாயிகள் அரசாங்கத்தின் அனைத்து நலன்களையும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பண்ணை ஐடியை கட்டாயமாக ஆதார் அட்டையுடன் விவசாயிகள் இணைத்திருக்க வேண்டும். இனி வரும் நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கும் தனித்துவமான ஐடி திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆதார் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலை இல்லாதோருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும், இந்த ஆதார் சரிபார்ப்பின் மூலமாக உத்தரபிரதேச அரசுக்கு சுமார் 8,400 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளதாகவும் உத்தர பிரதேச தலைமை செயலாளர் துர்கா சங்கர் அறிவித்துள்ளார். மேலும் இந்த ஆதார் சரிபார்ப்பின் மூலமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 1 கோடியே 92 லட்சத்து பள்ளி குழந்தைகள் பல்வேறு அரசாங்க திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து வருவதாகவும் செயலாளர் அறிவித்துள்ளார்.
மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கும் பண்ணை ஐடி குறித்தான வேலைப்பாடுகள் நடைபெற்று வருவதால் குடும்ப அடையாள அட்டையை விரைவில் வழங்குவதற்கான வேலையும் தொடங்கப்படும் என தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா அறிவித்துள்ளார். மேலும், பல ஆப்பிரிக்க நாடுகளும் இந்த ஆதார் முறையைத்தான் பின்பற்றி வருவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயலாளர் அதிகாரியும் அறிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்தின் எந்த வித நலத்திட்ட உதவிகளையும் பெறாத குடும்பத்திற்கும் இந்த திட்டத்தின் மூலமாக பலன் கிடைக்கும் என செயலாளர் அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்