Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேமிப்பு திட்டங்களில் தற்போது அதிக மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் இதனை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் சேமிக்க முடிவு செய்தனர். அதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அதிகமான வட்டி தொகையை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பெற முடிகிறது. அதனால் சேமிப்பு திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னைவாசிகளுக்கு ஹாப்பி நியூஸ் – பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி! அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் கடந்த சில காலங்களாக இந்த சேமிப்பு திட்டங்களில் அதிகளவு மோசடிகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் மோசடியை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தபால் துறை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அஞ்சல் சேமிப்புக் கணக்குகளில் மொபைல் நம்பர், பான் கார்டையும் இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. இந்த நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தற்போது இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.
இதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
1. வாடிக்கையாளர்கள் ரூ.20,000க்கு மேல் பணம் அனுப்பும் போதும், பணத்தை பெறும்போதும் மொபைல் நம்பரை சரிபார்க்க வேண்டும்.
2. அடுத்ததாக சேமிப்பு கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.
3. சேமிப்பு கணக்கு தொடங்கியர்களிடம் பான் கார்டு இல்லாதவராக இருப்பின் படிவம் 60/61 வாங்கப்பட வேண்டும்.
4. வாடிக்கையாளர்கள் ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சரிபார்க்க வேண்டும்.
5. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றுவதாக இருந்தால் இது குறித்து தனியாக எழுதி வாங்க வேண்டும்.
6. அஞ்சலக சேமிப்புக் கணக்குகளை முடிக்கும் போது வாடிக்கையாளரிடமிருந்து பாஸ்புக்கை வாங்கிவிட வேண்டும்.