தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் – முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் ஓமைக்ரான் பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த ஜனவரி 10ம் தேதி வரை தடை விதித்துள்ளது. அத்துடன் குழந்தைகளுக்கான மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் உள்ளிட்டவை செய்யலப்பட கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்களில் பொது மக்கள் அதிகம் கூடுவதால் 50% மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அத்துடன் ஜிம்கள், ஹோட்டல்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள் போன்றவற்றில் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என்றும் அரசு ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு, மூடுபனி எச்சரிக்கை – வானிலை மையம் அறிக்கை!
இந்நிலையில் கொரோனா பரவலின் 3வது அலை தொடங்க உள்ளது. இதன் அறிகுறியாக நேற்று தமிழகத்தில் 1,728 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 876 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 121 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கொரோனா பரவல் மற்றும் அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்கள், உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு? பெற்றோர்கள் கோரிக்கை!
அத்துடன் தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டு வருகிறது. இதனால் மக்கள் சிறப்பாக கொண்டாடவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் ஆலோசனைக்கு பிறகு அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும். அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது, வழிபாட்டு தளங்களில் கட்டுப்பாடு கொண்டுவருவது, கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.