தமிழகத்தில் புதிய கல்வியாண்டு ஆன்லைன் வகுப்புகள் – தனியார் பள்ளிகள் துவக்கம்!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு மற்ற வகுப்புகளுக்கும் வகுப்புக தொடங்கும் என பள்ளிகள் தெரிவித்துள்ளன.
ஆன்லைன் வகுப்புகள்:
கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பாடங்கள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. பள்ளி நிர்வாகங்கள் இதற்கான கால அட்டவணையை உருவாக்கி குறிப்பிட்ட நேரம் வரை தினந்தோறும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. பின் கடந்த வருடம் கொரோனா சற்று குறைந்தது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
பின் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியதால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ளது அரசு. தற்போது 2021 ம் ஆண்டிற்க்கான புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. ஆனாலும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளிகள் திறப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் புதிய கல்வியாண்டு குறித்து எந்த அறிவிப்புகளும் தெரிவிக்கப்படாமல் இருந்து.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஜூன் 7 முதல் எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரங்கள் இதோ!
கோடை விடுமுறைக்கு பிறகு வகுப்புகள் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது வருடம் முதற்கட்டமாக பொதுத்தேர்வு நடைபெறும். 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. சிபிஎஸ்இ, மெட்ரிக் மற்றும் பிற தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. தற்போது உள்ள தளர்வில்லா முழு ஊரடங்கு முடிந்த பிறகு மற்ற வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிகள் அறிவித்துள்ளது. இது குறித்து தொலைபேசி வழியாக தகவல்கள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.