தமிழகத்தில் பிப்.15 முதல் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 14ம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தினார். இதையடுத்து புதிய தளர்வுகள் தற்போது அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலை குறைய தொடங்கியதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று பரவல் தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன் கொரோனா பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து தொற்று பரவல் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – மார்ச் 2 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!
இந்த தளர்வுகள் வருகிற திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளது. அதனால் மேலும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஆலோசனையின் முடிவில் கூடுதல் தளர்வுகளை குறித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நர்சரி, மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – அரசாணை வெளியீடு!
மேலும் வகுப்புகளை கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பொருட்காட்சிகளை நடத்தவும் அனுமதி அளித்துள்ளது. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டம் உள்ளிட்ட மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளர்வுகள் வருகிற மார்ச் 2ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது