தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – மார்ச் 2 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது வருகிற 15ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.
தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலை குறைய தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று பரவல் தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தொற்று பரவல் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.
அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி முடிவு!
மேலும் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்தது. தற்போது முடிவடைய உள்ள நிலையில் இன்று தமிழக முதல்வர் மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி அளித்துள்ளது.
நாளை மறுநாள் (பிப்.14) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
இதையடுத்து திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகள் மார்ச் 2ம் தேதி வரை தொடரும் அறிவித்துள்ளது.