ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இ-பதிவு மூலமாக மட்டுமே ரயில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சில நேர மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நேர மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியது. மக்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை அமலில் இருந்தது. அதன் காரணமாக கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஜூன் 17 முதல் பார்கள், பேருந்துகள் செயல்பட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் போது பொதுப்போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை பல மாதங்களாக முற்றுலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ரயில் சேவை தொடர்ந்து அமலில் உள்ளது. தற்போது இ-பதிவு மூலமாக மாவட்டங்களுக்கு இடையே ரயில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, ஜூலை மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டிகளில் காலை 11 மணி முதல் பகல் 12 வரையும், நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதம் சுவிதா ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் எனவும், தாக்கல் முறை டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டால் 50 சதவிகித கட்டணம் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.