சட்ட பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் – என்.எஸ்.சந்தோஷ் குமார் நியமனம்!!
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.எஸ்.சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய துணைவேந்தர்
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.எஸ்.சந்தோஷ் குமார் அவர்களை நியமித்து அறிவித்துள்ளார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித். சட்டக்கல்லூரியில் புதிய துணை வேந்தராக பதவியில் அமர்த்தப்பட்ட இவர் மூன்று ஆண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பல்கலைக்கழக புதிய துணைவேந்தரான என்.எஸ்.சந்தோஷ் குமார் 26 வருடங்களாக பேராசிரியராக பணியாற்றியுள்ளார். மாநில சட்டக்கல்வி இயக்குனராகவும் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பல தேசிய, சர்வதேசிய அளவில் ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார் இவர்.
உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை!!
மேலும் திருச்சி, கோவை, சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் சட்ட கல்லூரிகளின் முதல்வர், துணை முதல்வர், பல்கலைக்கழக துணை வேந்தர் அமைப்புக்குழு தலைவர், செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர் உட்பட பல முக்கியமான பொறுப்புகளையும் வகித்துள்ளார். என்.எஸ்.சந்தோஷ் குமார் சட்ட கல்லூரியின் இயக்குனராக இருந்த போது புதிதாக 11 சட்ட கல்லூரிகளை உருவாக்குதல், 11 புதிய எம்.எல் படிப்புகளை துவங்கவும் முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்