விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி பாக்கியாவாக வேறு நடிகை – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த வாரம் கோபி மாட்டிக் கொள்ள போகிறார். அதனால் அதிரடி திருப்பம் ஒன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுசித்ரா சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி நடிகை:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதை என்ற டைட்டிலுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதை முழுக்க முழுக்க பாக்கியாவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு தாயான பாக்கியா படிக்காத பெண்ணாக இருப்பதால் பல இடங்களில் அவமானப்படுத்தப்படுகிறார். தனக்கு தெரிந்த வேலையில் முன்னேற வேண்டும் என்பதற்காக அவர் கடினமாக உழைத்து சொந்தமாக தொழில் தொடங்குகிறார்.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி அமீருக்கு விரைவில் திருமணம் – வைரலாகும் பதிவு!
பாக்கியாவை புரிந்து கொள்ளாத அவரது கணவர் அவரை விட்டு பிரிய வேண்டும் என நினைத்து தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் கோர்ட் வரை சென்று இருக்கிறார். அது பற்றி விவரம் எதுவும் தெரியாமல் பாக்கியா கோபியை நம்பி கோர்ட் வரை சென்றுவிட எல்லாம் முடிந்துவிடுகிறது. மேலும் வீட்டில் தாத்தா முடியாமல் இருப்பதால் எந்த ஆதரவும் இல்லாமல் பாக்கியா வருத்தத்தில் இருக்கிறார். இப்படி இந்த சீரியல் முழுவதும் பாக்கியாவையே சுற்றி இருக்கிறது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த மீனா – வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் பாக்கியா கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிகை சுசித்ரா தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அந்த கதாபாத்திரத்துடன் பொருந்தி இருக்கும் நிலையில் தற்போது சுசித்ரா இந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. மேலும் சுசித்ரா கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.