நீட் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி தகவல்!
இந்தியாவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பாஸ்வோடை யாரிடமும் பகிர வேண்டாம். மாணவர் சேர்க்கைக்கு போலி இணையத்தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாணவர்களை மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி எச்சரித்துள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2021 ஆண்டுக்கான நீட் தேர்வு கொரோனா பரவல் காரணமாக சற்று தாமதமாக நடைபெற்றது. நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12 ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 1ம் தேதி வெளியானது.
தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடல் – கூட்டுறவு சங்க பதிவாளர் விளக்கம்!
16 லட்சம் பேர் இந்த தேர்வில் 8,70,74 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். என்டிஏயின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதே போல் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மாநில வாரியாக மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. அந்தந்த மாநில அதிகாரிகள் நீட் கவுன்சிலிங்கை நடத்துகின்றனர். இந்த நிலையில் மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவன வளாகத்தில் 100 ரோபோக்கள் பணிக்காக அறிமுகம் – அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!
அதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங்கின் போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மாணவர் சேர்க்கை வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே எம்சிசி ஹோஸ்ட் செயல்படுகிறது. பிற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம். மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தவறான தகவல்களை பரப்ப கூடிய பிற இணையதளங்களையும், முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.