பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியாச்சா? உடனே இதை செக் பண்ணுங்க!!

0
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியாச்சா? உடனே இதை செக் பண்ணுங்க!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குதலில் குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு:

தமிழகத்தில் கடந்த ஜன.10 ஆம் தேதியில் இருந்து 1.86 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, நேற்றில் இருந்து பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் கிடைக்காதவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விரல்ரேகை பதிவின் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கலையொட்டி தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – இன்றைய விலை நிலவரம் இதோ!!

விரல்ரேகை பதியாதவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு இன்று தான் கடைசி நாள் என்பதால் டோக்கன் வாங்காதவர்கள் உடனடியாக ரேஷன் கடைக்கு சென்று பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளவும். அது மட்டுமல்லாமல், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்ற அனைவரின் மொபைல் எண்ணிற்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கும். இவ்வாறு, நீங்கள் பரிசு தொகுப்பை வாங்காமலேயே உங்களின் மொபைல் எண்ணிற்கு SMS வந்திருந்தால் உடனடியாக புகாரளித்து உங்களுக்கான பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளவும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!