அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் !!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்விற்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ படிப்புகளில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வானது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கட்டயமாக்கட்டுள்ளது. இதனால் தேசிய நுழைவுத்தேர்வினை மாணவர்கள் கட்டாயம் எழுதியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடத்த செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் 15 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல எதிர்ப்புகளுக்கு பின் இந்த தேர்வு தேசிய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது.
கடந்த 16 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் மாலை 5 மணி அளவில் வெளியிடப்பட்டன. இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் முதல் முறையிலேயே வெற்றி அடைந்துள்ளனர். இது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் அரசு நடத்தும் இலவச நீட் பயிற்சி மையங்களில் படித்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாகவும், நீட் தேர்வு பயத்தினை போக்கும் படியாகவும் உள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் மத்தியில் தமிழக அரசு பயிற்சி மையங்களின் மீது நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அதில், “அரசு இலவச பயிற்சி மையங்களில் மாணவர்கள் ஒரு முறை மட்டுமே இலவசமாக பயிற்சி பெற முடியும். அதற்கு பின் அவர்கள் தனி தேர்வு மையங்களில் கட்டணம் செலுத்தி தான் படிக்க வேண்டும். அரசு வழங்கும் இந்த இலவச பயிற்சியினை ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்” இவ்வாறாக தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்