நீட், ஜேஇஇ தேர்வு தேதி 2021 இன்று வெளியீடு – தேசிய தேர்வு மையம் தகவல்!
2021ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்வு குறித்த தேதிகளை தேசிய தேர்வு மையம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
நுழைவுத் தேர்வுகள்:
நடப்பு ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு கட்டங்களாக நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு முதல் இரண்டு அமர்வுகள் முறையே பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாத தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. நீட் தேர்வுகள் ஆகஸ்ட் 1ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்னும் தொடங்கப்படாததால் ஆகஸ்ட் 1ம் தேதி தேர்வு நடக்க சாத்தியமில்லை. நீட் தேர்விலும் ஜேஇஇ போன்று பல வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கர்நாடகாவில் ஜூலை 19, 22ம் தேதிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – ஏற்பாடுகள் தீவிரம்!
தள்ளிவைக்கப்பட்டுள்ள ஜேஇஇ தேர்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்படும் என்றும், இரண்டு அமர்வுகளுக்கு இடையில் சுமார் 25 நாட்கள் இடைவெளி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நுழைவுத் தேர்வுகள் இந்த ஆண்டு மாணவர்களின் கல்லூரி சேர்க்கையில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக பல பல்கலைக்கழகங்களும் பொதுவான CUCET நுழைவுத் தேர்வு நடத்துவதற்கும் அரசு ஆலோசனை நடத்துகிறது. இந்த தேர்வையும் என்டிஏ மையமே நடத்தும்.
TN Job “FB Group” Join Now
நாடு முழுவதும் தொற்று நிலைமையை அரசு மதிப்பீடு செய்து வருகிறது. மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்வுகள் நடக்கலாம் என்றும், என்.டி.ஏ அறிவிக்கும் தகுந்த சமூக இடைவெளியையும் பின்பற்றி தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுஆய்வு முடிக்கப்பட்டு, அதிகாரிகளும், அரசும் கலந்து ஆலோசித்த பின்னர் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.