மத்திய அரசில் உதவித்தொகையுடன் வேலை – 180 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

1
மத்திய அரசில் உதவித்தொகையுடன் வேலை - 180 காலிப்பணியிடங்கள் முழு விவரங்களுடன்!
மத்திய அரசில் உதவித்தொகையுடன் வேலை - 180 காலிப்பணியிடங்கள் முழு விவரங்களுடன்!

மத்திய அரசில் உதவித்தொகையுடன் வேலை – 180 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

Naval Ship Repair Yard ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Trade Apprentice பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Naval Ship Repair Yard
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 180
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Online
Naval Ship Repair Yard காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Trade Apprentice பணிக்கென மொத்தம் 180 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் 400+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.92,300/-

Trade Apprentice கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். மேலும் சம்மந்தபட்ட பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Naval Ship Repair Yard வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 14 என்றும் அதிகபட்ச வயதானது 21 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Trade Apprentice ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,700/- முதல் 8050/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Naval Ship Repair Yard தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!