தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேசிய திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட்!

இந்தியாவில் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜனவரி 29ம் தேதி அன்று உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு:

இந்தியாவில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் திறனாய்வுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக மாதந்தோறும் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பயன் பெறுகின்றனர். வறுமையின் காரணமாக கல்வி இடைநிற்றல் தவிர்க்கப்படுகிறது. மேலும் கற்றலில் திறமையுள்ள மாணவர்களை கண்டறியும் நோக்கிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு இத்தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் இலேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

அந்த வகையில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறவுள்ளது. வரும் 23ம் தேதி தேர்வு நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்வு ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை உதவித்தொகை அரசு சார்பாக வழங்கப்படும். 9, 10ம் வகுப்புகளில் மாதம் 10,000 ரூபாயும், 11ம் வகுப்பில் 1250 ரூபாயும், 12ம் வகுப்புகளில் மாதம் 2,000 ரூபாயும் அதனை தொடர்ந்து மேற்படிப்பு மற்றும் ஆய்வு படிப்புகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இன்றுடன் மகர விளக்கு நிறைவு!

இந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் இன்று முதல் (19.01.2022) ஹால் டிக்கெட்டை ஆன்லைன் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 39 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!