இந்தியாவில் தேசிய கல்விக்கொள்கை விரைவில் அமல் – மத்திய கல்வித்துறை செயலாளர் தகவல்!
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வித்துறை செயலாளர் இந்தியாவில் தேசிய கல்வி கொள்கை கல்வி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை:
இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய கல்விக் கொள்கை, கல்வியை உலகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறித்து பேசிய மத்திய கல்வித்துறை செயலாளர் இந்தியாவில் இன்னும் ஒன்றரை வருடத்தில் புதிய கல்வி கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இன்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற ஜி – 20 நாடுகளின் கருத்தரங்கிற்கு பின் செய்தியாளரிடம் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கையும் அதில் குறிப்பிட்டுள்ள தேர்வு முறைகளும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தமிழக அரசின் நான் முதல்வர் திட்டம் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
UPSC Geo-Scientist இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!
இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் திறன் பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் கூறி பெருமிதம் அடைந்தார். இந்த புதிய கல்வி கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.