தடுப்பூசி செலுத்தியும் கொரானாவா? அம்மா நடிகை கலக்கம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல அம்மா நடிகையான நதியா இரண்டு தவணை தடுப்பூசி போட்டும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தொற்று பரவல் மிக தீவிரமாக உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சில தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு என்பது தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தளர்வில் சினிமா மற்றும் சின்னத்திரை சார்ந்த படப்பிடிப்பில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே திரைக்கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவர்கள் நிலையான கோவிட் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதை ஏற்று படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.
புதுவை பல்கலை சமுதாய கல்லூரி மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 26 முதல் தொடக்க்கம்!
இந்த நிலையில், “பூவே பூச்சூடவா” திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபல முன்னணி நடிகையாகவும், அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மிக பிரபலமடைந்த நடிகை நதியா அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர் இதற்கு முன் கொரோனா தாக்குதலுக்காக அரசு அறிவித்துள்ள இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
TN Job “FB Group” Join Now
மேலும் இவர் ஹைதராபாத்தில் இயக்குனர் லிங்குசாமி அவர்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் இவரது வீட்டில் உள்ளவர்களுக்கும் இவரது வீட்டின் பணியாளர்களுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனால் விரைவில் தொற்றில் இருந்து மீள்வார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.