பால் விலை லிட்டருக்கு மேலும் உயர்வு – அரசு தீவிர யோசனை!
கர்நாடக மாநிலத்தில் பால் விலை லிட்டருக்கு மேலும் உயர்த்தப்பட உள்ளது குறித்து அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
பால்விலை உயர்வு:
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் வெங்கடேஷ் அவர்கள் நந்தினி பால் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடக அரசின் பால் கூட்டமைப்பு சார்பில் நந்தினி என்ற பெயரில் பால் விற்பனை நடந்து வருகிறது. கர்நாடகா அரசு பதவி ஏற்றத்திற்கு பின்னர் பால் விலை உயர்வு குறித்த இரண்டாவது அறிவிப்பு வெளியிட உள்ளது.
மத்திய பட்ஜெட் 2024 அப்டேட் – நிதியமைச்சர் முக்கிய தகவல்!
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கால்நடை தீவனங்களின் விலை உயர்வு காரணமாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்பதால் கட்சி வேறுபாடுகளை மீறி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.