விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் இருந்து விலகும் நட்சத்திரா? ரசிகர்கள் ஷாக்!
தமிழும் சரஸ்வதியும் தொடரில் சரஸ்வதியாக நடித்து தற்போது புகழ் அடைந்துள்ள நட்சத்திரா தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதால், சீரியலை விட்டு விலக உள்ளார் என்று சின்னத்திரை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
‘தமிழும் சரஸ்வதியும்’ நாயகி:
விஜய் டிவியில் வரும் சீரியல்கள் அனைத்துமே அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்த வரையிலும் பட்டியலில் முன்னணியில் இருந்து மக்களை திருப்திபடுத்தினாலே அவரவர் வெற்றி தொடர்கள் தான். அந்த வகையில் விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தொடங்கப்பட்டு, விரைவிலேயே மக்களை கவர தொடங்கியது. விகடன் குழுமம் தயாரிப்பதால் எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருந்தது. அதேபோல், குடும்பத்து ரசிகர்களை தன் வசம் தமிழும் சரஸ்வதியும் தொடர் இழுத்து விட்டது என்றே சொல்லலாம்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வெண்பா பரீனா – ரசிகர்களின் கேள்விக்கு பதில்!
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக தீபக் மற்றும் ஹீரோயினாக நட்சத்திராவும் நடித்து வருகின்றனர். இவர்கள் முன்னதாக இருவருமே தொகுப்பாளராகவும் பிரபலமானவர்கள். நட்சத்திரா சன் டிவியின் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளதோடு, விருது விழாக்களையும் நடத்தியுள்ளார். பல பிரபலங்களை பேட்டி கொண்டுள்ளதால் இவரின் புகழும் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், தமிழும் சரஸ்வதியும் தொடர் மூலம் நட்சத்திராவின் புகழ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அனைவரும் நன்கு படித்த குடும்பத்தில் சரஸ்வதி மட்டும் படிக்காத பெண்ணாக இருக்கிறார். இதனால் அவரது அப்பாவின் கோபத்திற்கு காரணமாகிறார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!
தற்போது சீரியலில் நட்சத்திராவிற்கு திருமணம் பேச்சுக்கள் நடந்து வருகிறது. அதேபோல், நிஜத்திலும் நட்சத்திரா தனது பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த ராகவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதத்தில் நடந்துள்ள நிலையில், தற்போது திருமண நிகழ்ச்சிகள் தொடங்கி விட்டது. இதனால் நட்சத்திரா விரைவில் தமிழும் சரஸ்வதியும் தொடரை விட்டு விலக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த நட்சத்திராவின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.