‘நாம் இருவர் நமக்கு இருவர் 3’ சீரியலில் களமிறங்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி, மாயன் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியின் பெரிய இரண்டு நட்சத்திரங்களான மிர்ச்சி செந்தில் மற்றும் பாரதி கண்ணம்மா ரோஷினி இருவரும் புதிய சீரியலில் ஒன்றாக நடிப்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் குழம்பி போய் உள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர் 3:
விஜய் டிவியின் அனைத்து பழைய சீரியல்களையும் வைத்து சமீப நாட்களாக அதிக அளவில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கே ஆச்சர்யமாக உள்ளது. அந்த அளவிற்கு எடிட் மிகவும் துல்லியமாக உள்ளது. பலரும் இது வெறும் எடிட் தான் என்று புரிந்து கொண்டு சிரித்து விட்டு நகர்ந்தாலும், சிலர் இது உண்மை என்றும் அந்த வீடியோவில் வந்தது போல் சீரியல் எடுக்கப்பட உள்ளது என்றும் நம்பி வருகின்றனர்.
அஸ்வின் நடிப்பில் விரைவில் தொடங்க இருக்கும் “ரெட்டை வால் குருவி சீசன் 2” – ப்ரோமோ ரிலீஸ்!
பல ஹிட் சீரியல்களை வைத்து இந்த எடிட் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினி கதாநாயகியாகவும், நாம் இருவர் நமக்கு இருவர் மிர்ச்சி செந்தில் கதையின் நாயகனாகவும் நடிப்பது போல் காட்சிகள் வருகிறது. ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அதிகம் பிரபலமடைந்தவர். இவரது நடிப்பை பார்த்தால் அது நடிப்பு என்று தோன்றாமல், அந்த கதாபாத்திரமாகவே வாழ்வது போல் இருக்கும்.
DNA டெஸ்டில் இருந்து தப்பிக்க அனு போட்ட திட்டம், மாட்டிக் கொண்ட பூஜா – “ரோஜா” சீரியல் எபிசோட்!
அதே போல், ரேடியோ மிர்ச்சி சேனலில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து கொண்டு விஜய் டிவியின் மதுர சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நுழைந்தவர் செந்தில். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் சின்னத்திரை அளித்த அங்கீகாரம் சினிமாவில் கிடைக்கவில்லை. தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வில் நடித்து வருகிறார். ரோஷிணியும், செந்திலும் இணைந்து ஒன்றாக நடிப்பது போல் வெளியான இந்த எடிட் ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கலாய்த்து தள்ளுகின்றனர். இதனால் இந்த எடிட் ப்ரோமோ வைரலாக பரவி வருகிறது.