சென்னை: இன்று செப்-30 பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் இன்றைய தினம் (செப்-30) நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை:
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் தான் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரித்த நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (அக்.1) முதல் அரசு பேருந்துகள் இயக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனை தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் 1 லிட்டர் 99.15 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டர் 94.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (செப்-30) நிலவரப்படி விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது.
மாணவர்களை காப்பது அரசின் கடமை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை!
பெட்ரோல் 1 லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும், டீசல் 1 லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 94.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தளர்வுகள் அதிகமாக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வருவதால் எரிபொருளின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது.