தமிழக பள்ளிகளில் 3000+ ஆசிரியர் காலியிடம் – ஜன.24 வேலைவாய்ப்பு முகாம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
தமிழக தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வரும் ஜன.24ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; கொட்டும் பனி மூட்டம் – குளு குளு வானிலை!
அதாவது, Tamil, English, biology, botany, maths, computer science, commerce ஆகிய பாடங்களுக்கு கிட்டத்தட்ட 3548 ஆசிரியர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இந்த Kindergarten, Primary பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் மூலமாக தேர்வு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியராக விருப்பமுள்ளவர்கள் ஜன.24ஆம் தேதி சென்னை மாண்ட் போர்ட் மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவும்.