CBSE 12ம் வகுப்பு & நுழைவுத்தேர்வுகள் – நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை செய்ய உயர்மட்ட கூட்டம் நாளை (மே 23) நடைபெற உள்ளது.
ஆலோசனை கூட்டம்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை காரணமாக பொதுத்தேர்வுகள் துவங்கி நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மீண்டுமாக நடத்துவது குறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கல்வி அமைச்சர்கள், கல்விச் செயலாளர்கள் மற்றும் மாநில தேர்வு வாரியங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உயர்மட்ட கூட்டம் நாளை (மே 23) நடைபெறுகிறது.
தமிழகத்திற்கு 2,23,060 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் – இன்று வருகை!!
அதன் படி நாளை (மே 23) காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக மத்திய கல்வி அமைச்சர், நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள CBSE பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து வரவேற்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் CBSE கல்வி அமைச்சகம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கவனத்தில் கொண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.