கல்விக்கட்டணம் செலுத்தாவிட்டால், ஆன்லைன் வகுப்பிற்கு அனுமதி இல்லை?- தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை!!!
பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் சேர்க்கவில்லை என்று தனியார் பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இந்நிலையில் புகார் வந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பள்ளிகள் மீது நடவடிக்கை:
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளிக்கட்டணம் செலுத்தியும் ஆன்லைன் வகுப்புகள் சரிவர நடத்தாத 16 பள்ளிகள் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் மாவட்ட விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!!
அதில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,”“தமிழகம் முழுவதும் 2900 தனியார் பள்ளிகளுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 288 பள்ளிகளுக்கும் தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் இடஒதுக்கீட்டையும் அறிவித்து, அவர்களுக்கான கல்லூரி கட்டணத்தை ரூபாய் 16 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசே செலுத்தி வருகிறது.
புதிய சிக்கல் காரணமாக பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
ஆனால் தனியார் பள்ளிகளில் பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்காதது குறித்து அந்த பள்ளிகளுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவ்வாறு புகார்கள் குறித்து அரசிற்கு 16 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைகள் வந்துள்ளது. ஏற்கனவே 10 பள்ளிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகமாக வசூலித்த பள்ளிகளுக்கு கட்டண தொகையை திருப்பி தரும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
2020-21,ஆண்டு தனியார் பள்ளிகள் கட்டணங்கள் ரத்துசெய்யும் ஆட்சிக்குத்தான் எங்களது ஓட்டு
How to complain? Is there any procedure?