2.3 கோடி பேருக்கு அரசு வேலையா? மாநில தலைவருக்கு அமைச்சர் பதில்!

0
2.3 கோடி பேருக்கு அரசு வேலையா? மாநில தலைவருக்கு அமைச்சர் பதில்!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என கூறியதில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

கருத்துக்கு பதில்:

தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசு பணிகளின் எண்ணிக்கையானது சுமார் 9.5 லட்சம். ஆனால் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு தனது X தளத்தின் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

X தளத்தின் பக்கத்தில் ”ஒரு ஒப்பீட்டுக்கு — தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்.. BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று. அதாவது, குழந்தைகள். ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா” என தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!