தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான நடவடிக்கைகள் – அதிகாரிகள் மும்முரம்!
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இலவச பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
11, 12ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த ஓராண்டு காலமாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடையில் கடந்த ஜனவரி மாதம் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. பிறகு ஏப்ரல் மாதம் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. இந்த இரண்டாம் அலை காரணமாக பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.
தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பரிசீலனை!
இதனை தொடர்ந்து 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து பொதுத்தேவுகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. புதிய கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அச்சிட்டு தயார் நிலையில் வைத்துள்ளது. மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு அரசு அறிவிக்கும் தேதியில் மாணவர்களை பள்ளிகளுக்கு வர வைத்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் மொத்தம் 594 தொடக்கப் பள்ளிகளும் , 221 நடுநிலைப் பள்ளிகளும், 76 உயர்நிலைப் பள்ளிகள், 84 மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 975 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் அனைத்தும் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு உள்ளது.