Tokyo Olympics போட்டிகள் – இந்திய வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி!
இந்திய குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 – 3 என்ற கணக்கில் கொலம்பிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.
ஒலிம்பிக் போட்டிகள்:
ஒலிம்பிக்கின் 32வது போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடத்துவதற்கு ஒலிம்பிக் ஆணையம் முடிவு செய்தது. 2020ம் ஆண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டிகள் 2021ம் ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் இன்றி அதிதீவிர கட்டுப்பாடுகளுடன் இந்த வருட போட்டிகள் நடக்கிறது. ஜூலை 23ம் தேதி தொடங்கிய போட்டிகள் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்க இருக்கிறது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை – அரசு அறிவிப்பு!
இன்றைய அட்டவணையின் படி, இந்தியாவின் மேரி கோம் மற்றும் கொலம்பியா நாட்டை சேர்ந்த Ingrit Valencia ஆகிய இருவரும் மோதினர். இந்நிலையில் 51 கிலோ பிளை வெயிட் எடை பிரிவில் மேரி கோம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோம் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
38 வயதான மேரி கோம் இந்தியாவின் சீனியர் வீராங்கனை என்ற பெருமையுடன் போட்டிகளில் கலந்து கொண்டார். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் மேரி கோம். அதேபோல், Ingrit Valencia கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேரி கோம் தோல்வியடைந்தது இந்திய ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து அவருக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இத்துடன் மேரி கோம் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஓய்வடைகிறார்.