இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு – மத்திய அமைச்சர் மசோதா தாக்கல்!
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று தாக்கல் செய்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மக்களவையில் அதனை தாக்கல் செய்தார்.
மசோதா தாக்கல்:
இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் வயது ஆண்களுக்கு 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் உள்ளது. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கு சமீபத்தில் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து பேசினார். இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்ட இருந்தது.
திருவாரூரில் டிச.26ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 100+ தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!
நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நாடாளுமன்றத்தில் குளிர்கால பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பெண்களின் திருமண வயது குறித்த மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் அனைத்து மாநில மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்பு தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு பெரிய அளவு எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று மசோதா எவ்வித தடையும் இன்றி தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை சி.எம்.டி.ஏ குழுமத்தில் வேலைவாய்ப்பு – ஜன.13 விண்ணப்பிக்க கடைசி நாள்!
தமிழக முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க.,வும், காங்கிரஸ் கட்சியும் பெண்களின் திருமண வயது உயர்வு குறித்த முடிவுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற நிலை குழுவிற்கு அனுப்பி பரிசளிக்குமாறு இரு கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இதனால் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் படி ஆண்களை போல பெண்களுக்கும் திருமண வயது 21 ஆக மாற்றப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.