Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – விலை குறைந்த ரீசார்ஜ் திட்டம்!
ஜியோ நிறுவனம் ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் விலைக்கு ஏற்றவாறு டேட்டா கிடைக்கிறது.
ஜியோ திட்டங்கள்:
ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஜியோவின் விலை குறைந்த டேட்டா பிளான்களால் வேறு நிறுவன வாடிக்கையாளர்களும் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். தற்போது வீட்டிலிருந்தே ஜியோ சிம் வாங்கும் வசதியும் உள்ளது.மேலும் ஜியோ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 20% வரை கேஷ்பேக் பெறும் ஆபரும் கிடைக்கிறது. குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிக டேட்டாக்களை வழங்கும் வகையில் ஜியோ பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – செப்.29 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
ஜியோவின் விலை குறைந்த திட்டமான 98 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் புதிய வடிவில் அறிமுகபடுத்தப்பட்டது. கடந்த மாதங்களில் நிலவிய ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்தவர்களுக்கு ஜியோவின் ரீசார்ஜ் திட்டங்கள் பயனுள்ளதாக இருந்தது. ஜியோ நிறுவனம் ஜியோ போன் பயனர்களையும் கருத்தில் கொண்டு விலை குறைந்த சில ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் ஜியோவின் 22 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கிறது.
புகை பிடிப்பவரா நீங்கள்? அப்போ 80% கொரோனா தாக்கும் – ஆய்வு முடிவுகள்!
மேலும் ஜியோவின் ரூபாய் 52 பிளான் 28 நாட்களுக்கு 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் இலவச அழைப்பு, மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் இல்லை. அடுத்ததாக 72 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 52 ரூபாய் ஜியோ போன் டேட்டா பிளானில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் ஜியோ போன் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும்.