மார்ச் 11ம் தேதி காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மலேசியாவின் சபா மாநிலத்தில் தினசரி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ள கடல் தொடர்பான ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மார்ச் 11 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
மலேசியாவின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள மாநிலமான சபாவில், கடத்தல்-கப்பம் உட்பட எல்லை தாண்டிய குற்றவாளிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக கடல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஆனது தினசரி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மார்ச் 11 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
குடியரசு தின அலங்கார ஊர்திகள் – ஒருவார காலம் பொது மக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு!
இது தொடர்பாக சபா காவல்துறை ஆணையர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மலேசியாவின் தவாவ், செம்போர்னா, குனாக், லஹாட் டத்து, கினாபதங்கன், சண்டகன் மற்றும் பெலூரான் ஆகிய இடங்களில் இருந்து மூன்று கடல் மைல்கள் (5.55 கிமீ) வரையிலான பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் பொருந்தும். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் ஊரடங்கு உத்தரவின் போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதே நேரத்தில் வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி கொடுக்கப்படாது. தீவில் உள்ள உள்ளூர்வாசிகள், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறலைத் தடுக்க இந்த நீர்நிலைகளில் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டிய அவசியம் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது சபா அரசின் உளவுத்துறை ஆதாரங்களின்படி, கடத்தல் குழுக்கள் மற்றும் அபு சயாஃப் போராளிகள் எல்லை தாண்டிய குற்றங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இதனால் அப்பகுதியில் கடல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் வசதியாக பாதுகாப்புப் படையினர் தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும் இந்த ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.