வேலையில்லா இளைஞர்களுக்கு கடன் உதவி – மாநில அரசின் அறிவிப்பு!

0
வேலையில்லா இளைஞர்களுக்கு கடன் உதவி - மாநில அரசின் அறிவிப்பு!
வேலையில்லா இளைஞர்களுக்கு கடன் உதவி - மாநில அரசின் அறிவிப்பு!
வேலையில்லா இளைஞர்களுக்கு கடன் உதவி – மாநில அரசின் அறிவிப்பு!

கர்நாடகா அரசு சார்பில் வேலையில்லா இளைஞர்கள் கை வண்டிகள் வாங்கி அதன் மூலம் பொருள்களை விற்பனை செய்ய கடன் மற்றும் மானிய உதவி வழங்கி வருகிறது.

கடன் உதவி

இந்தியாவில் மத்திய அரசு மக்களின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநில அரசால் சுயதொழில் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் எஸ்சி/எஸ்டி பிரிவு இளைஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள நேரடி கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேலையில்லாத இளைஞர்கள் கை வண்டிகள் வாங்கி அதில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்து, சுயதொழில் செய்து வருமானம் ஈட்டலாம்.

பொதுமக்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து – அமைச்சர் அறிவிப்பு!!

அதற்கான கடன் மற்றும் மானிய உதவி கர்நாடகா அரசால் வழங்கப்படுகிறது. வேலையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சுயதொழில் மேற்கொள்ள செலவு ரூ. 1 லட்சம் வந்தால், அதில் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். எஞ்சிய 50 ஆயிரம் கடனாக வழங்கப்படும். அதனை 4 சதவீத வட்டி விகிதத்தில் 30 தவணைகளில் திருப்பி செலுத்த வேண்டும். கடன் வழங்கப்பட்டு அவர்கள் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டால் அதற்கான அனுமதி ரத்து செய்யப்படும். இந்த திட்டத்தில் சேர விண்ணப்பம், புகைப்படம், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை ,வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணக்கங்கள் அவசியம்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!