சென்னையில் ‘லைட் மெட்ரோ’ அமைக்க முடிவு – விவரங்கள் இதோ!!
சென்னையில் தற்போது மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களை இணைக்கும் வகையில் ‘லைட் மெட்ரோ’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
லைட் மெட்ரோ
சென்னை போன்ற பிற முக்கிய நகரங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்கள் மக்களின் பயணங்களை எளிதாக்குவதுடன், பயண நேரத்தையும் குறைக்கிறது. இதனால், மெட்ரோ திட்டங்கள் பயணிகளிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ‘லைட் மெட்ரோ’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஊழியருக்கு ஷாக் கொடுத்த கூகுள் நிறுவனம் – நேர்காணலின் போது பணிநீக்கம்!!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த ‘லைட் மெட்ரோ’ திட்டம், மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்படும் பகுதிக்கு அருகில் உள்ள இடங்களை இணைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மெட்ரோ திட்டங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு உயர் மட்ட பாதை அமைக்க ரூ.200 முதல் ரூ.250 கோடி வரையும், சுரங்கப்பாதை அமைக்க ரூ.500 முதல் ரூ.550 கோடி வரையும் செலவாகும். ஆனால், இந்த லைட் மெட்ரோ திட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு உயர் மட்ட பாதை அமைக்க ரூ.100 கோடி மட்டுமே தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.