ஊழியருக்கு ஷாக் கொடுத்த கூகுள் நிறுவனம் – நேர்காணலின் போது பணிநீக்கம்!!!
புதிய ஊழியர்களை நேர்காணல் செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவரை கூகுள் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கூகுள் பணிநீக்கம்
தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு இந்த காலம் ஒரு கடினமாக காலம் என்று சொல்லலாம். ஏனென்றால் உலகளவிலான முன்னணி நிறுவனங்கள் குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்த பணிநீக்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுவதாக அவ்வப்போது விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. என்றாலும், திடீரென செய்யப்படும் பணிநீக்கங்கள் காரணமாக ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்க செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த வகையில், கூகுள் நிறுவனம் செய்த அதிரடியான நடவடிக்கையால் ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, கூகுள் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு பணியாளராக செயல்பட்டு வந்த லானிகன் ரியான் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர், வேலைக்கு விண்ணப்பித்த நபர்களை தொலைபேசி மூலம் நேர்காணல் செய்து கொண்டிருந்த போது பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறி வருத்தம் அடைந்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம், பணிநீக்கம் இப்படியும் இருக்குமா என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.