தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலக புதுப்பிப்பு – ஆகஸ்ட் 27 கடைசி நாள்!
மதுரை மாவட்டத்தில் 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி நாளை (27.08.2021) கடைசி தேதியாகும் அதற்குள் புதுப்பித்து கொள்ள மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மகாலஷ்மி அறிவுறுத்தியுள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அரசு பணிக்கு செல்ல விரும்புவோர் அந்தந்த மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வி தகுதிகளை பதிவு செய்வது கட்டாயம். இதன் மூலம் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் பதிவு செய்த தகவல்களை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்வது அவசியமாகும். தங்கள் கல்வி தகுதிகளையும் அப்டேட் செய்ய வேண்டும். தற்போது நிலவி வரும் பெருந்தொற்று காலத்தில் ஏராளமானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
தொழிற் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு – சட்ட மசோதா தாக்கல்!
இவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கல்வித் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் தொகை மாறுபடுகிறது. இதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கால அவகாசம் அளித்தனர்.
TN Job “FB Group” Join Now
ஆன்லைன் மூலம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (27.08.2021) முடிவடையவுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 27 க்குள் நேரிலோ அல்லது www.tnvelaivaippu.gov.in என்ற இணையதள முகவரியில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மகாலஷ்மி அறிவுறுத்தியுள்ளார்.