தமிழக அரசுப் பள்ளிகளில் புதிய மாற்றம் – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவ மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறனை மேம்படுத்த தமிழ்நாடு மொழி ஆய்வகத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடக்கம்
தமிழக அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறனை மேம்படுத்த தமிழ்நாடு மொழி ஆய்வகத்திட்டம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் மூலம் மாணவர்கள் தங்களுடைய கணினிகள் மூலம் டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி சுய வேக கற்றலை அதிகரிக்கலாம்.
தமிழகத்தில் அதிரடியாக மூடப்படும் 275 டாஸ்மாக் கடைகள் – அரசு ஆலோசனை!
இந்நிலையில் 2023 ஆம் கல்வியாண்டில் அக்டோபர் மாதம் முதல் 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்திற்காக அந்தந்த பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஹெட்செட்டுகளும் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.