பள்ளி விடுமுறைகள் நீட்டிப்பு.. ஜனவரி 10ம் தேதி தான் மீண்டும் திறப்பு – மாணவர்களுக்கு குட் நியூஸ்!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது குளிர் கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புகைமூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் பஞ்சாபின் லாகூரில் பள்ளி விடுமுறைகள் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கும் விடுமுறை:
வட இந்தியா மாநிலங்களில் தற்போது அதிக பனி கொட்டி வருகிறது. இதனால் மிகவும் மோசமான வானிலை நிலவுகிறது. மோசமான வானிலை காரணமாக சம்பந்தப்பட்ட அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பனி காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. அதாவது, குளிர் காலத்தில் காற்று அதிக கனமானதாக மாறுகிறது. இதனால் நச்சு துகள்கள் வளிமண்டலத்தில் இருந்து கீழ் நோக்கி வருகிறது.
தமிழகத்தில் அரங்கேறிய தீண்டாமை கொடுமை – பொதுமக்கள் புகாரளிக்க Whatsapp எண் அறிமுகம்!
Download ExamsDaily Mobile App
மேலும், மாசுபட்ட புகை மற்றும் நிலத்தில் இருந்து நச்சு வாய்ந்த பொருட்களை எரிப்பதன் மூலமாகவும், வாகன புகை மூலமாகவும் காற்று அதிக புகை மூட்டமாக மாறுகிறது. இதனால், பஞ்சாபின் லாகூரில் அதிக புகை மூட்டம் தற்போது நிலவி வருகிறது. நேற்று 191 AQI என்ற மோசமான நிலையில் காற்று உள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது ஆரோக்கியமற்றதாக கருதப்படுவதால், லாகூர் உயர் நீதிமன்றம் அங்குள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 9ம் தேதி வரை குளிர் கால விடுமுறையை நீடிக்குமாறு கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.