முழு ஊரடங்கு உத்தரவிற்கு வாய்ப்பில்லை – மாநில முதல்வர் தகவல்!!

0
முழு ஊரடங்கு உத்தரவிற்கு வாய்ப்பில்லை - மாநில முதல்வர் தகவல்!!
முழு ஊரடங்கு உத்தரவிற்கு வாய்ப்பில்லை - மாநில முதல்வர் தகவல்!!
முழு ஊரடங்கு உத்தரவிற்கு வாய்ப்பில்லை – மாநில முதல்வர் தகவல்!!

கேரளா மாநிலத்தில் முதல்வர் பிரனாயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அம்மாநிலத்தில் முழு ஊரடங்கு கிடையாது, அதற்கு பதிலாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.

முழு ஊரடங்கு:

கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் அரசு வலியுறுத்தி வருகிறது.  இதனை தொடர்ந்து அம்மாநிலத்தில் பேருந்துகள், ரயில் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளது.  தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அன்று நடைபெறும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

N Job “FB  Group” Join Now

மேலும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் பிரனாயி விஜயன் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இதற்கு பதிலாக நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1500 நிவாரண நிதி – மாநில அரசு அறிவிப்பு!!

இதை தொடர்ந்து தற்போது உள்ள இரவு ஊரடங்கு தொடரும்.  மேலும் அவர் 70 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மருந்தும், 30 லட்சம் டோஸ் கோவாக்சின் மருந்தும் வாங்குவதென முடிவு செய்யப்பட்ட்டுள்ளதாக அவைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!