கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!!
பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது என கேந்திரிய வித்யாலயா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கை
மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கவுள்ளது. அதன் படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக நடத்தப்படவுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் படி ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 1 முதல் 19 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கையில் விண்ணப்பிக்க https://www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டும் எனவும், கைபேசி வழியாக விண்ணப்பிக்க https://www.kvsonlineadmission.kvs.gov.in/apps/ என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள மற்ற காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 8 முதல் 15ஆம் தேதி வரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான (2021-2022) 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை படிவங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.