தமிழகத்தில் ரூ.30,000/- சம்பளத்தில் பெண்களுக்கு காத்திருக்கும் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
கரூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை கரூர் |
பணியின் பெயர் | மையநிர்வாகி, முதுநிலை ஆலோசகர் & வழக்குபணியாளர் |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Karur Social Welfare காலிப்பணியிடங்கள்:
- மையநிர்வாகி – 1 பணியிடம்
- முதுநிலை ஆலோசகர் – 1 பணியிடம்
- வழக்குபணியாளர் – 1 பணியிடம்
கல்வி தகுதி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Social Work/ Development Work/ Counselling/ Psychology ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சமூக நலத்துறை பணிக்கான வயது வரம்பு:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
சம்பள விவரம்:
- மையநிர்வாகி – ரூ.30,000/-
- முதுநிலை ஆலோசகர் – ரூ.20,000/-
- வழக்குபணியாளர் – ரூ.15,000/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் வளாகம், கரூர்-639007 என்ற முகவரிக்கு28-ஏப்ரல்-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2023 Pdf