ஜூன் 14 முதல் இரவு, வார இறுதி முழு ஊரடங்கு அமல் – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநில அரசு ஜூன் 14ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. இருப்பினும் தினசரி இரவு நேரங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கர்நாடகா மாநில அரசு ஜூன் 21வரை நீட்டித்து உள்ள முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கி உள்ளது. மேலும் ஜூன் 18 அன்று மாலை 7 மணி முதல் ஜூன் 21 காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை தினசரி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜூன் 14 காலை 6 மணி முதல் ஜூன் 21 காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமுள்ள சிக்கமகளூரு, சிவமோகா, தாவங்கரே, மைசூரு, சாமராஜனகர, ஹாசன், தட்சிணா கன்னடம், பெங்களூரு கிராமப்புறம், மண்ட்யா, பெலகாவி மற்றும் கோடகு ஆகிய 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஒரு வார காலம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் இதோ,
- அனைத்து தொழில்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
- உணவு, மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன், பால் மற்றும் விலங்கு தீவனம் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
- பொது விநியோக கடைகள், மதுபான கடைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் ஆப்டிகல் கடைகள் ஒரே காலகட்டத்தில் அனுமதிக்கப்படும்.
- சுய கட்டுப்பாடு அவசியம், மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
- நடைபயிற்சி செய்பவர்களுக்கு காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை பூங்காக்கள் திறந்திருக்கும்.
- டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் அதிகபட்சம் இரண்டு பயணிகளுடன் இயங்கலாம்.
- இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவின் போது, தனிநபர்களின் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும்.