முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா- அதிர்ச்சியில் கர்நாடகம்!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த 2 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி வந்த பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் ராஜினாமா
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜூலை மாதம் 26 ஆம் தேதி நான்காவது முறையாக, முதல்வராக பொறுப்பெடுத்துக் கொண்டார் எடியூரப்பா. தனது முதல்வர் பணியை சீரும் சிறப்புமாக செய்து வந்த அவர், கொரோனா பேரிடர் காலத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தார்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய YONO விதிகள்!
இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதாவது பாஜக கட்சியை சேர்ந்த 75 வயது பிந்திய தலைவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 76 வயதுடைய எடியூரப்பாவுக்கு கர்நாடகா முதல்வர் பதவியை வழங்கிய பாஜக, 2 ஆண்டுகள் கழித்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நிபந்தனை வைத்தது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் இன்றுடன் (ஜூலை 26) அவரது 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதால், பதவியில் இருந்து விலக வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இன்று (ஜூலை 26) பிற்பகல், ஆளுநரை சந்தித்து அவரது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.