ஜூன் 16 தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – கலந்து கொண்டு பயனடையுங்க!
தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஜூன் 16ம் தேதி அன்று தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வேலைவாய்ப்பு:
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் மாதம் தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் தனியார் துறையினர் தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து கொள்கின்றனர். இதன்படி இதுவரை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் தனியார் துறை வேலைவாய்ப்பை பெற்ற இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அப்டேட் – நேரடியாக வீடியோ எடுக்கும் வசதி அறிமுகம்!
இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாகை மற்றும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் 25க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். எனவே பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அனைவரும் தங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அடையாள ஆவணங்களுடன் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.